பாபநாசம், ஆக.11 - பாபநாசம் வித்யா பாடசாலை (எ) பாபநா சம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாண வர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப் பறைகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப் படுகின்றனர். குழந்தைநேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 8 வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடித்து இரண்டு மாதங் களைக் கடந்த பின்னரும் திறப்பு விழா நடத்த வில்லை. இதனால் மாணவர்கள் வகுப்பறை வளாகத்தில் கல்வி பயிலும் அவலநிலை குறித்தும், பள்ளியின் பின்பக்க காம்பவுண்ட் சுவர் இடியும் நிலையில் இருப்பது குறித்தும் தீக்கதிர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி யானது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பள்ளியின் 8 வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். இந்நிலையில், பள்ளியின் பின்பக்க காம்ப வுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவருக்குப் பதில், பள்ளியைச் சுற்றிலும் தரமான, உயரமான, உறுதியான காம்ப வுண்ட் சுவர் கட்ட மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.