districts

img

தலைஞாயிறு பகுதிகளில் மழையால் மூழ்கிய நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

நாகப்பட்டினம், நவ.29 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி யுள்ளது. மூழ்கிய நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் என சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும், வெள்ளியன்று மழை சற்று குறைந்து கானப்பட்டது. இருப்பி னும் பல பகுதிகளில் வெள்ள நீரானது வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. சித்தாய்மூர் ஊராட்சி சாத்தியமங்கலம் பகுதியில் 100 ஏக்கர் அளவில் சம்பா சாகு படியும், 100 ஏக்கர் அளவில் குறுவை சாகுபடி யும் மழை நீரில் மூழ்கியுள்ளன. கச்ச நகரம், முத்தரசபுரம் பகுதிகளில் 110 ஏக்கர் அளவில் நெற்பயிர் நீருக்குள் மூழ்கி யுள்ளது. கொத்தங்குடி ஊராட்சி தொழுதூர் பகுதிகளில் 50 ஏக்கர் அளவிலும், வாட்டாக் குடியில் 150 ஏக்கர் அளவிலும், உம்பளச்சே ரியில் 180 ஏக்கர் அளவிலும், தலைஞாயிறு ஐந்தாம்சேத்தியில் 50 ஏக்கர் அளவிலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியுள்ள நெற்பயிர் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்  என சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆய்வு பயணத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, தலை ஞாயிறு ஒன்றியச் செயலாளர் வி.ராஜகுரு, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராஜா, விச ஒன்றிய தலைவர் தனபால், சித்தாய்மூர் கிளைச் செயலாளர் எஸ்.கே.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.