பொன்னேரி வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை
அரியலூர், டிச.25 - ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்ற சோழ கங்கத்தின் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கீழவெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக உட்கோட் டையில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் கிளைச் செயலாளர் எ.சேகர் தலைமையில் நடை பெற்றது. விவசாய சங்க கொடியை மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் ஏற்றி வைத்துப் பேசினார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உட்கோட்டை விளாங்குளத்தில் ஆண்கள் சுகாதார வளா கத்தை செப்பனிட்டு கழிவறையை பயன்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பொன் னேரியில் உள்ள 4 வாய்க்கால்களையும் தூர்வாரி சீர மைக்க வேண்டும். கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் தீவனம் வழங்க வேண்டும். உட்கோட்டை தேரோ டும் வீதியில் உள்ள வாய்க்கால்களில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும். உட்கோட்டை சுடுகாடு பாதையை சரிசெய்ய வேண்டும். பட்டியல் வகுப்பு மக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். தா.பழூர் சாலை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலாயுதநகர், கரடிகுளம், கழுவந் தோண்டி வரை மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
தஞ்சையில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்
தஞ்சாவூர், டிச.25- அரசின் அனைத்துத் துறை சேவைகளும், ஒரே இடத்தில் கிடைத்திடும் வகை யில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிச.26 (செவ் வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, தஞ்சாவூர் ராஜப்பா நகர் ராஜ் பேலஸ் மண்டபத்திலும், கும்பகோ ணம் திருவிடைமருதூர் சாலை மகாராஜா மஹாலி லும், மணக்கரம்பை சமு தாயக்கூடம், இனாத்துக் கான்பட்டி ராவுசாப்பட்டி கிராம சேவை மையம், உளூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, அசூர் திருவள்ளுவர் திருமண மண்டபம் ஆகிய இடங்க ளில் இந்த முகாம் நடை பெற உள்ளது. இதில், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பதிவு செய்து தீர்வு காணலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மின் ஊழியர் மத்திய அமைப்பு பேரவை
அறந்தாங்கி, டிச.25 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் அறந்தாங்கி கோட்ட பேரவை நடைபெற்றது. அமைப்பின் புதுக்கோட்டை கிளை, அறந்தாங்கி கோட்டம் ஆண்டு பேரவைக்கு கோட்டத் தலைவர் மா.அறி வழகன் தலைமை வகித்தார். மாவட்ட திட்டத் தலைவர் சித்தையன், செயலாளர் நடராஜன், பொருளாளர் ஆறு முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆலங்குடி கோட்டச் செயலாளர் தர்மராஜன், கீரனூர் கோட்டச் செயலாளர் சின்னதம்பி மற்றும் அறந்தாங்கி கோட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோட்டச் செயலாளர் விஜய குமார் நன்றி கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு உதவி
பாபநாசம், டிச.25 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு, பாப நாசம் லயன்ஸ் கிளப் சார்பில் போர்வைகள் வழங்கப் பட்டன. பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, நவநீதகிருஷ்ணன், மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) முருகன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
பாபநாசம், டிச.25 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதி கரித்தபடி உள்ளது. தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிவ தால், பொதுமக்கள், சிறுவர்கள் நடந்து செல்ல அச்சப்படு கின்றனர். தெருக்களுக்குள் புதிதாக வருபவர்களை நாய்கள் துரத்துகின்றன. மேலும், நாய்கள் சண்டை யிடுவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடை கின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்லவே முடிய வில்லை. தோல் வியாதியுள்ள நாய்களும் சுற்றித் திரிகின்றன. எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரியுள்ளனர்.
சிமெண்ட் ஆலையில் கூலியை உயர்த்தி வழங்க கோரிக்கை
அரியலூர், டிச.25 - அரியலூர் மாவட்ட சிமெண்ட் ஆலை மற்றும் சுரங்கத் தொழிலாளர் சங்க கூட்டம் சிஐடியு மாவட்டக் குழு அலுவ லகத்தில் நடைபெற்றது. கங்காசலம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சீதா என்ற கருப்பையா, செயலாளராக எம்.சரவணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிமெண்ட் ஆலையில் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அரசு சிமெண்ட் ஆலையில் தார்ப்பாய் கட்டும் தொழிலா ளர் சங்கம், சிஐடியு சங்கத்துடன் இணைக்கப்பட்டது.
போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது
திருச்சிராப்பள்ளி, டிச.25 - திருச்சி உறையூர் குழு மணி சாலையில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் தினந்தோறும் வியாபாரிகள், இளை ஞர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப் பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி உறையூர் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று, தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலை யில் ஞாயிறன்று நடத்திய அதிரடி சோதனையில், போதை மாத்திரைகள் விற்றதாக திருச்சி உறையூர் பாண்ட மங்கலத்தைச் சேர்ந்த அப்துல் சபிக் (22), அதே பகுதியைச் சேர்ந்த உசேன் பாஷா (24), முகமது இர்பான் (19), திருச்சி குழுமணி ரோடு சீராதோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (19) ஆகிய நான்கு பேரை போலீ சார் கைது செய்தனர். இதில் அப்துல் ஷபிக் கல்லூரி மாணவர் என்பதும், மற்ற மூன்று பேரும் மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டு பவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஏராளமான பொட்டலங்கள், போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலை வாங்கித்தருவதாக மோசடி: தேனியில் பத்திரிகை ஆசிரியர் கைது
தேனி, டிச.24- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தேனி என்ஜினீயரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த வழக்கில் பத்திரிகை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி அருகே குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச் சாமி மகன் கார்த்திகேயன் (வயது 26). இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக நீதிமன்ற உத்தரவுப் படி, ராணிப் பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா மோகனாவரம் திமிரி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மதன்குமார் (35), அவருடைய மனைவி கார்த்திகா (32), சென்னை விருகம்பாக்கம் 2-வது மெயின் வீதியை சேர்ந்த ரிப்போர்ட்டர் வேர்ல்டு என்ற இதழின் ஆசிரியர் பிரபு (38) ஆகியோர் வேலூரில் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் உள்நாடு, வெளிநாடுகளில் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி ரூ 14 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தனர். இதில் மதன்குமாரை கைது செய்தனர். பத்திரிகை ஆசிரியர் கைது இந்த வழக்கில் தலைமறைவான பத்திரிகை ஆசிரி யர் பிரபுவை காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு மாநில செய்தி -மக்கள் தொடர்பு இயக்கு நர் அடையாள அட்டை வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.
கோவில் திருவிழாவில் பட்டியல் சாதியினர் உள்ளிட்ட அனைவரையும் அனுமதிக்க வேண்டும்
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு மதுரை, டிச.25- கோவில் திருவிழாவில் அனைத்து சாதியினரும் பங்கேற்க அனுமதிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த சி.பாண்டியராஜன் என்பவர். தாக் கல் செய்த மனுவில், சேதுபுரம் செல்லியாரம்மன் கோவில் திருவிழா வில் பட்டியல் சமூகத்தினர் பிரிவினர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு கிரா மத்தில் இந்த நிலை நிலவினால், அதைத் தடுக்க வேண்டும். குறிப்பிட் டார். எந்தவொரு நபரும் அல்லது குழு வும் ஒரு நபரின் மதக் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்க முடியாது. இந்த உரிமையை அரசியலமைப்பு சாச னம் வழங்கியுள்ளது. குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வா கம் மூலம் இப்பிரச்னையை கடுமையா கக் கையாள வேண்டும் என்று கோ வில் திருவிழாவை இந்து சமய அற நிலையத்துறை நடத்த வேண்டும். கிராமத்தில் தீண்டாமை நிலவு கிறதா என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சி யரிடம் திருச்சுளி வட்டாட்சியர் அறிக்கை அளிக்க வேண்டுமென நீதி பதி உத்தரவிட்டார். கோவில் திருவிழா வில், பட்டியல் சமூகத்தினர் உட்பட அனைத்து பக்தர்களும் பங்கேற்பதை இந்து சமய அறநிலையத்துறை உறுதிப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.