நாகப்பட்டினம், நவ.21- நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட சுனாமி குடி யிருப்பு வீடுகள் உள்ளன. 2004 சுனாமி பேரழிவால் நம்பியார் நகர் பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு சவேரியார் கோவில் தெரு பின்புறம் உள்ள பகுதி யில் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நிதி மூலம் 2005 ஆம் ஆண்டு வீடுகள் கட்டத் தொடங்கி முடிக்கப்பட்டு வழங்கப் பட்டன. பெரும்பான்மையாக மீனவ மக்கள் அப்பகுதியில் வசித்து வந்தாலும், அந்த வீடுகளில் 36 வீடுகள் அப்பகுதியில் வசித்து வந்த தலித் மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது அந்த 36 வீடுகளும், வாழ்வ தற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. இதனால், அன்றாடம் தினக் கூலிகளாக வேலைகளுக்கு சென்று வரும் மக்களுக்கு வீடற்ற நிலை உண்டாகியுள்ளது. பல வீடுகளில் மேற்கூரை இடிந்து கீழே கொட்டி விட்டது. மழையால் மேற்கூரை வழியாக தண்ணீர் வீடு முழுவதிலும் தேங்கி யுள்ளது. வயோதிகர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள், குழந்தைகள் என அனை வரும் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். சமைப்பதற்கு கூட இடமில்லா மல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். தேங்கியுள்ள மழை நீரால் கொசுக் கடியுடன், விஷ வண்டுகள், பாம்புகள் உள்ளிட்ட விஷச் சந்துக்களால் உயிர்ப் பயம் தொற்றியுள்ளது. எப்போது மேற்கூரை இடிந்து விழும் என்ற அச்சத்தி லேயே இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழைக்காலம் முடியும் வரை மாற்று இடங்களில் வசிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மழை நீரை அப்பகுதியில் இருந்து வெளியேற்று வதற்கு உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அப்பகுதி மக்களுடன் தொடர்ச்சியாக பேசியும், நடவடிக்கையும் மேற்கொண்டு வரும் சிபிஐஎம் நகரக் குழு செயலாளர் க.வெங்கடேசன் அப்பகுதி மக்களை திரட்டி இப் பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். சிபிஐஎம் நகரக்குழு சார்பில், அப்பகுதி மக்கள் உடன் மாவட்ட ஆட்சி யர் ப. ஆகாஷை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இச்சந்திப்பில் சிபிஐஎம் நாகை நகரக் குழுச் செயலாளர் க.வெங்கடேசன், நகரக் குழு உறுப்பினர் டி.தினேஷ், 14 ஆவது வார்டு சிபிஎம் கிளைச் செயலாளர் எம். விஜயகுமார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முகேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.