பாபநாசம், மே 7- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம், மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து பாப நாசம் அருகே உள்ள அய்யம பேட்டையில் ரத்த தான முகாம் நடத்தின. இங்குள்ள அரசு மேல் நிலைப் பள்ளி யில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் திலகர் தலைமை வகித் தார். அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யம்பேட்டை அரசு மேல் நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் துளசி அய்யா முகா மைத் துவக்கி வைத்தார். இதில் 25 பேர் ரத்ததானம் செய்தனர். ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் காதர் பாட்சா, ரகமதுல்லா, கோதண்டராமன், ரோட்டரி செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.