திருவாரூர், ஜூன் 8-
திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்திற்கு உட் கட்ட அரசு கல்லூரிகளில் 2017 முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் பயின்ற மாண வர்களுக்கு இதுவரை பட்டம் வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள் ளது.
இதுதொடர்பாக சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் பா.ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட திருவா ரூர் மாவட்டம் நன்னிலம் ஒன் றியம் நன்னிலம் அரசு கல் லூரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தண்டலைச்சேரி அரசு கல்லூரிகளில் 2017-ஆம் ஆண்டில் இருந்து 2022 -ஆம் ஆண்டு வரை பயின்ற சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்துள்ளனர்.
ஆனால், இம்மாணவர் களுக்கு இதுநாள் வரை பட் டம் வழங்காமலும் பட்ட மளிப்பு நிகழ்ச்சிகளை நடத் தாமலும் கல்லூரி நிர்வாகங் கள் செயல்பட்டு கொண்டி ருக்கின்றன. ஆனால், பட்ட மளிப்பு நிகழ்ச்சிக்கான கட்ட ணங்களையும் பெற்றோர்-ஆசிரியர் கழகம் என்ற பெய ரில், ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மாணவர்களி டம் தனியார் கல்லூரிக்கு இணையாக வசூல் செய்யப் பட்டது.
ஆயிரக்கணக்கில் கட்ட ணங்களை வசூலித்து விட்டு இன்று வரையிலும் பட்டம ளிப்பு நிகழ்ச்சிகளை நடத் தாமல் டெல்டா பகுதிகளில் அதுவும் குறிப்பாக கிரா மப்புற மாணவர்களை வஞ் சிக்கக் கூடிய செயலில் சில அரசு கல்வி வளாகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
எனவே, உடனடியாக பட்டமளிப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இல்லை யென்றால் மாணவர் சங்கத் தின் சார்பில் முற்றுகை போராட்டத்தை முன்னெ டுப்போம்’’ எனத் தெரிவித் துள்ளார்.