நாகர்கோவில், செப்.29 கன்னியாகுமரி மாவட்டம் மலை யோர கிராமங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு, கல்லாறு, ஆறுகணி போன்ற பகுதிகளில் கடந்த சிலநாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கியமான அணை களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள் ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. அதிகபட்சமாக சிற்றாறு பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 16.8, பெருஞ்சாணி 11.2, சிற்றார் 1-30, சிற்றார்2-10.4, பூதப் பாண்டி- 13.4, களியல்- 12, கன்னிமார் -9.4, கொட்டாரம்- 11.6,குழித்துறை 15.6, மயிலாடி 16.2, நாகர்கோ வில் 8.2, புத்தன்அணை 9, சுருளோடு 17.2, தக்கலை 19,குளச்சல் 16, இரணியல் 12.4, பாலமோர் 23.4, மாம்பழத்துறை யாறு 24, திற்பரப்பு 21.5, கோழிப்போர் விளை 15.2, அடையாமடை 10.2, குருந்தன்கோடு 20, முள்ளங்கினா விளை 12.8, ஆணைக்கிடங்கு 21.4.மி.மீ. மழை பதிவாகியுள்ளது.