districts

img

குப்பையில் வீசப்படும் சேதமடைந்த தக்காளிகள்

தூய்மைப் பணியாளர்கள் அவதி சின்னாளப்பட்டி, டிச.10- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு  -மதுரைச் சாலையில் அரசு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு மொத்த  காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கு பெங்களூர் தக்காளி லாரிகளில் வரு கிறது.  லாரியில் 2 நாள் வருவதால் தக்காளி கள் கொஞ்சம் சேதமடைகின்றன. அவ்வாறு சேதமடையும் தக்காளிகளை மொத்த விற்பனை கடையினர் குப்பை களில் கொட்டுகின்றனர்.  குப்பையில் கொட்டப்படும் சேதம டைந்த தக்காளிகள், தூய்மைப் பணி யாளர்கள் வந்து அள்ளுவதற்குள் மிகவும் சேதமடைவதால், அதை அள்ள  தூய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்ற னர். எனவே குப்பை லாரி வரும் போது சேதமடைந்த தக்காளிகளை, விற்பனை யாளர்கள் தூய்மைப் பணியாளர்களி டம் கொடுக்க வேண்டும் என்று தூய்மை  பணியாளர்கள் கோரியுள்ளனர்.