districts

img

திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர் சேதம்: வைக்கோல் தட்டுப்பாடு

சீர்காழி, ஜன.17 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் - சீர்காழி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அறு வடைக்கு தயாராகிக் கொண்டிருந்த சம்பா  நெற்பயிர் சேதமடைந்தது. முற்றி அறுவ டைக்கு தயாராகிக் கொண்டிருந்த நெற்கதிர் கள் தண்ணீரில் மூழ்கியதால் சேதமடைந்து சில இடங்களில் முளைக்க ஆரம்பித்தன. இதனால் நெற்கதிர் பயனற்று பதர் ஆகி விட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதனால் கொள்ளிடம் - சீர்காழி பகுதிகளில் மட்டும் சுமார் 6200 ஏக்கர்  நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் வைக்கோலும் எந்த  பயனும் இன்றி அழுக ஆரம்பித்தது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் மழை யால் பாதிக்கப்பட்டு எஞ்சியிருந்த நெற்பயிரை உரிய அறுவடை காலத்திற்கு முன்பே அறுவடை செய்யக் கடிய கட்டாய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். அறு வடை செய்யப்பட்ட வைக்கோலும் எந்தப் பய னும் இல்லாமல் போய்விட்டது. வருடந்தோ றும் வைக்கோலை இருப்பு வைத்து கால்நடை களுக்கு பயன்படுத்துவது போல, இந்த வருட மும் கால்நடைகளுக்கு உணவாக பயன்ப டுத்தலாம் என்று விவசாயிகள் காத்திருந்த னர். ஆனால் இந்த வருடம் திடீரென பெய்த  மழையால் போதிய வைக்கோல்கூட கிடைக் காத  சூழ்நிலை உருவாகி, வைக்கோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது சம்பா அறுவடை ஆரம்பப் பணி  துவக்க நிலையில் உள்ளது. விவசாய தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் உள்ள கால்நடைகளுக்கு போதிய வைக்கோல் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு இயந்திரத்தால் வயலில் தயாரிக்கப்பட்ட ஒரு  கற்றை வைக்கோல் ரூ.200 வீதம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வைக்கோல் தட்டுப்பாடு நிலவி வருவதால், ஒரு கற்றை வைக்கோல் ரூ.250 ஆக உயர்ந் துள்ளது.  விலை உயர்ந்தாலும் போதிய வைக்கோல் கிடைக்காத நிலை உள்ளது. வைக்கோல்  கற்றைகளை வாங்குவதற்கு இடைத்தரகர் கள் தயார் நிலையில் உள்ளனர். வைக்கோல்  வாங்கி விற்பனை செய்வதன் மூலம் சென்ற வருடங்களை விட இந்த வருடம் அதிக லாபம்  கிடைக்கும் என்றும் வைக்கோல் வியாபாரி கள் தெரிவித்தனர்.