districts

img

த.பே.மா.லு கல்லூரி பேராசிரியர்கள் ஜமுக்காள காத்திருப்புப் போராட்டம்

மயிலாடுதுறை, ஆக.7 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து ஜமுக்காள காத்திருப்புப் போ ராட்டம் புதனன்று துவங்கியது.  சங்கத்தின் மாநில பொருளாளரும், கிளை தலைவருமான முனைவர் சேவியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீதர் தங்கத் துரை, துணைத்தலைவர் கோபிநாத், இணை  செயலாளர் ஷீலா எட்வர்டு, பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலு வைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். யுஜிசி நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., மற்றும் பி.எச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம்  வழங்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் களுக்கு பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணை யினை உடனே வழங்க வேண்டும். யுஜிசி அறி வித்துள்ளபடி புத்தொளி/புத்தாக்க பயிற்சிக் கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.  பணியில் உள்ள ஆசிரியர்களின் இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு பி.எச்.டி  கட்டாயம் என்பதை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ டர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற வுள்ளது. இந்நிலையில் புதனன்று கல்லூரி மைதா னம் அருகில் கருப்பு ஆடையணிந்து, ஜமுக் காளத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின்  மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்து  உரையாற்றினர்.