பேராவூரணி, ஏப்.29-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் நகரின் மையப் பகுதியில் ஆனந்த வல்லி பாசன வாய்க்கால் அமைந்துள் ளது. கல்லணைக் கால்வாயின் கிளை வாய்க்காலான ஆவணம் பகுதியில் இருந்து பிரிந்து ஆனந்தவல்லி வாய்க்கால் பழைய நகரம், மாவடு குறிச்சி, பொன்னாங்கண்ணிக்காடு, பேராவூரணி நகர், செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல் வழியாக கொரட்டூர் ஏரியில் சென்று நிறைவடைகிறது.
இந்நிலையில், நீண்ட காலங்களாக ஆனந்தவல்லி வாய்க்கால் மராமத்து செய்யப்படாத நிலையில் கரைகளில் அமைக்கப்பட்ட சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும், படிக்கட்டுகள் உடைந்து போய், துருசுகள், ஷட்டர்கள் இருக் கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டன.
இப்போது குடியிருப்போர் வீடு களின் கழிவு நீர் ஆனந்தவல்லி வாய்க்காலில் விடப்பட்டு, சாக்கடை கழிவு நீர் வாய்க்காலாக மாறிவிட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் டாக்டர் காந்தி மருத்துவமனை அருகே உள்ள ஆனந்த வல்லி வாய்க்காலில் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து சிதிலமடைந்த நிலை யில் உள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி கூறுகையில், ‘‘ஆனந்தவல்லி வாய்க்கால் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருவது வருந்தத் தக்கது. பொதுப்பணித்துறை அலுவல கம் அருகில் இருந்தும் இந்த நிலை உள்ளது.
இது சம்பந்தமாக நீண்ட நாட்களாக முறையிட்டும் எவரும் கண்டு கொள்ளாத நிலை உள்ளது. தமிழக அரசு டெல்டா மாவட்டங் களில் தூர்வாரும் பணிக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலின் நிலை விவசாயிகள், பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பு பாலத்தை சீரமைக்க வேண்டும், படிக்கட்டுகள் அமைத்து தர வேண் டும். இல்லையேல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இப்பகுதி மக்களை திரட்டி போராட்டத்தை நடத்தும்’’ என்றார்.