districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி: பேருந்து சேவை துவக்கம்

தஞ்சாவூர், அக்.27-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்டத்தின் எதிரொலி யாக, பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது.  தஞ்சாவூரில் இருந்து மாரி யம்மன் கோவில் வழியாக, எம்.ஜி.ஆர் நகர், நெல்லித்தோப்பு, குமி ழக்குடி, சீதம்பாடி, கோனூர், மாடி,  மூங்கிலடி, அண்ணா தோட்டம், கலக்குடி வரை செல்ல அரசுப் பேருந்து வசதி இல்லை. இதனால்  இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல கட்ட போராட்டங் கள் நடைபெற்றன.  அப்போது, நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என அதிகாரி கள் உறுதியளித்தனர். ஆனால், பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்டபடி பேருந்து  சேவை துவக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பேருந்து வசதி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவி லூரில் இருந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் வரை அக்.28 அன்று நடை பயணம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. போராட்ட அறிவிப்பு எதிரொலி யாக, அக்.26 அன்று கலக்குடியில், அரசுப் பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது.  இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மாலதி, அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அம்மா பேட்டை ஒன்றியக்குழு பெருந்தலைவர் வீ.கலைச்செல்வன், ஊராட்சி மன்றத் தலை வர்கள் கலக்குடி அகிலா சங்கர், நெல்லித் தோப்பு ராஜாத்தி ராஜன், ஆலக்குடி ப.புண்ணியமூர்த்தி, போக்குவரத்து கழகம் டி.எம்.பாலமுருகன், ஏ.எம்.கருப்புசாமி, வரு வாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேருந்து வசதி துவக்கப்பட்டதால், மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றி தெரி வித்தனர்.