districts

img

சிபிஎம் மாநில மைய கட்டட நிதியாக ரூ.80 ஆயிரம் வழங்கல்

பெரம்பலூர், ஏப்.30-  

    பெரம்பலூர் மாவட்டத்தில் தீக்கதிர் வாச கர் வட்டம் நடத்திய இரண்டாம் ஆண்டு தொடர் மார்க்சிய பயிற்சி வகுப்பு ஜனவரி  21-ஆம் தேதி தொடங்கி வாரம் சனிக்கிழமை  தோறும் 15 வாரங்கள் நடைபெற்ற பயிற்சி  வகுப்பு ஏப்ரல் 29 அன்று நிறைவுபெற்றது.  

   நிறைவு நாள் பயிற்சி வகுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்டச் செயற் குழு எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மருத்துவர் சி.கருணாகரன் வரவேற்றார்.  

   அம்பேத்கர், பெரியார் ஓர் மார்க்சியப் பார்வை என்ற தலைப்பில் இடதுசாரி சிந்த னையாளர், கவிஞர், எழுத்தாளர் இரா.எட்வின் சிறப்புரையாற்றினர். கட்சியின் ஒன்றி யச் செயலாளர் எம்.கருணாநிதி நன்றி கூறி னார்.  

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சாமி.நடராஜன்,  டி.ரவீந்திரன் ஆகியோர் நிறைவுரையாற்றி னர். கட்சியின் மாநில மைய கட்டட நிதி மூன் றாம் தவணையாக ரூ.80 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ்,  வழங்கி னார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரெங்கநாதன், அ.கலையரசி, ஆர்.கோகுலகிருஷ்ணன், ராஜேந்திரன், பெரம்ப லூர் நகரச் செயலாளர் ஆர்.சிவானந்தம், வட்டச் செயலாளர்கள குன்னம் செல்ல முத்து, ஆலத்தூர் செல்லத்துரை, மாவட்டக்  குழு உறுப்பினர்கள் எஸ்.கே.சரவணன், பி. கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்ட னர்.