பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, வீட்டுவரியை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய திருவெள்ளறை கிளைகள் சார்பில் திருவெள்ளறை கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச்செயலாளர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் பேசினார்.