districts

img

பாஜகவின் மோசடிக்கு துணை போகும் பாரத ஸ்டேட் பேங்க்கை கண்டித்து தஞ்சையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மார்ச்.7 -  முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் தேர்தல் பத்திரம் தொ டர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும்  பாஜக - கார்ப்பரேட் நிறுவனங்க ளின் கூட்டுக்கு ஆதரவாக துணை  போகும் பாரத ஸ்டேட் பேங்க்  நிர்வா கத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை  மாநகரச் செயலாளர் எம்.வடிவே லன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன் ஆகியோர் தலை மை வகித்தனர். மூத்த தலைவர் என்.சீனிவாசன் துவக்கி வைத்து பேசினார்.  மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன் கண்டன உரை யாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், ஆர்.கலைச்செல்வி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.