districts

img

100 நாள் வேலை கோரி கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் போராட்டம்

கரூர்,ஜூலை 11- நூறு நாள் வேலை அடையாள அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு தொடர்ந்து நூறு நாள் வேலை வழங்க வேண்டும், சட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூர் ஒன்றியக்குழு சார்பில் தரகம் பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.வேல்முரு கன் முன்னிலை வகித்தார்.  திண்டுக் கல்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் உரையாற்றினார். மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் கே.சக்திவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் பி.ராஜூ ஆகியோர்  பேசினர்.  கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.பழனிவேல், தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.