districts

img

பொதுமக்களை சந்திக்க மறுக்கும் குளித்தலை சார் ஆட்சியரைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 25 - கரூர் மாவட்டம், குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு, மக்களின் கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியி னர், சமூக ஆர்வலர்கள் என யார்  சென்றாலும் சார் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை வழங்க முடியவில்லை. எப்போது சென்றாலும் அவரை நேரில் பார்க்க முடியாமல் அலுவல கத்தில் உள்ள அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு திரும்பி வருகிறார்கள்.  மேலும் இந்த கோரிக்கை மனுக்களுக்கு உரிய பதிலையும்  சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர்க ளுக்கும், அரசியல் கட்சியின ருக்கும் வழங்குவதில்லை. பொது  மக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் கவனம் செலுத்தி நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை.  மக்களை மதிக்காத இந்த போக்கினை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன், உட னடியாக சார் ஆட்சியர் பொது மக்களை சந்திக்கும் நேரத்தை தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும். நேரில் மனுக்களை வாங்க வேண்டும். இனுங்கூர் வைர புரி மக்களின் குடிநீர், சாலை, பொதுக் கழிப்பறை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஈச்சம் பட்டியில் உள்ள பட்டியலின மக்க ளின் தீண்டாமை கொடுமை களுக்கு தீர்வு காண வேண்டும்.  இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற் குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை  ஒன்றியக் குழு சார்பில் மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளி யன்று குளித்தலை காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குளித் தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துசெல்வன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ ஆகியோர் கண்டன உரையாற்றி னர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.