districts

img

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.25 - ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட் டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு பேருந்து நிறுத்தம் கட்சி கிளை, சங்கிலித் தோப்பு கட்சி கிளை சார்பில் ஸ்ரீரங்கத்தில் புத னன்று இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதிக் குழு  உறுப்பினர் கோவிந்தன் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி மத்திய கட்டுப் பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்டக்  குழு உறுப்பினர் சந்தானம், ஸ்ரீரங்கம் பகுதி  செயலாளர் தர்மா, பேருந்து நிறுத்த கிளைச் செயலாளர் சுரேஷ், சங்கிலித்தோப்பு கிளைச் செயலாளர் பச்சையம்மாள் ஆகி யோர் பேசினர்.  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு  மருத்துவமனையில் போதுமான மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியா ளர்கள், உதவியாளர்களை  நியமனம் செய்ய  வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு மருத்து வமனையில் இரவு நேரங்களில் பிரசவம் பார்க்க சுழற்சி முறையில் 24 மணிநேரமும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் மருத்துவமனை உள்ளே வெளி நபர்கள் சுற்றி வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்நோயா ளிகள் பாதுகாப்பிற்காக மருத்துவமனை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களில் உள்நோயாளிகள் வார்டு பகுதியில் போதிய  செவிலியர்கள் இல்லாததால், ஒப்பந்தத் தொழிலாளர்களே மருத்துவம் பார்க்கும் அவலத்தை தடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி நோயாளிகளுக்கு வீல்சேர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.  காலை நேரங்களில் ஓ.பி. சீட்டு வாங்கும் இடத்தில், ஆட்கள் பற்றாக்குறை இருப்ப தால், பொதுமக்கள் பல மணிநேரம் வரிசை யில் காத்திருக்கும் நிலையை போக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.