districts

img

சாதிப் பெயரைச் சொல்லி அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மீது தாக்குதல்

மன்னார்குடி, அக்.4 - சாதிப் பெயரைச் சொல்லி பள்ளி  வளாகத்திலேயே ஆசிரியரை தாக்கியவரை  கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  முனைவர் எம்.டி.சிவா ஆசிரிய ராக பணியாற்றுகிறார். இவரை திமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ள ஐ.வி.கும ரேசன் உள்ளிட்டோர் 18.9.2024  அன்று பள்ளி  நேரத்தில் பள்ளி வளாகத்திலேயே சாதிப்  பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி கடுமை யாக தாக்கியுள்ளனர். இதில் ஆசிரியர் சிவா விற்கு தலை, கால் மற்றும் உடலில் பிற பகுதி களில் காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு களின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இதில் சக்தி என்கிற ஜெகதீசன், முருகே சன் ஆகிய இருவர் மட்டுமே கைது செய்யப் பட்டுள்ளனர். முதல் மற்றும் முக்கிய குற்ற வாளியான ஐ.வி.குமரேசன் இதுவரை கைது  செய்யப்படவில்லை. எனவே முதல் குற்ற வாளியான ஐ.வி.குமரேசனை உடனே கைது  செய்ய வேண்டும். பள்ளியில் நடைபெறும் கலைக்கூடம் மற்றும் அனைத்து கட்டு மானப் பணியின் முறைகேடுகளை மாவட்ட  ஆட்சியர் மூலம் ஆய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.  இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பிலிருந்து ஐ.வி.கும ரேசனை உடனே நீக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று  வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவது என அறி விக்கப்பட்டிருந்தது. கட்சி ஊழியர்கள், வாலிபர் சங்க உறுப்பி னர்கள், நூற்றுக்கணக்கானோர் வடபாதி மங்கலம் பேருந்து நிலையத்தில் திரண்ட னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய குழு மற்றும் வாலிபர்  சங்கத்தின் ஒன்றிய குழு சார்பாக நடக்க விருந்த இப்போராட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்,  திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி ஆகியோர் முன்னிலையில், வட பாதிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக காவல் நிலையம் நோக்கி புறப் பட்டுச் சென்றனர்.  இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருள்செல் வம், காவல்  துணை கண்காணிப்பாளர் மணி கண்டன் மற்றும் வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளர், பேரணி சென்ற இடத்திற்கு வந்து, வியாழன் மாலை அல்லது வெள்ளி யன்று ஐ.வி.குமரேசனை கைது செய்து விடு வோம் என வாக்குறுதி அளித்தனர்.  அதன்பேரில் காவல் நிலைய முற்றுகைப்  போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, கண்டன  ஆர்ப்பாட்டமாக பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.ஜெய பால் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செய லாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்டக் செயற்குழு  உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் வாலி பர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன், மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.