districts

img

திருவையாறுடன் விளாங்குடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.24-  நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள திரு வையாறுடன் விளாங்குடி ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றி யக் குழு உறுப்பினர்  பி. செந்தாமரைச்செல்வி தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.பக்கிரிசாமி, அகில  இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலை வர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.பழனி அய்யா, எம்.ராம், எம்.கதிர வன் மற்றும் கிராம பொது மக்கள், விவசாயத் தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். விளாங்குடி ஊராட் சியை, திருவையாறு நக ராட்சியாக தரம் உயர்த்தி னால் நூறு நாள் வேலைத் திட்டம் பாதிக்கப்படும். அர சின் பல்வேறு சலுகைகள் கிடைக்காது. இது பொரு ளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேலும் இன்ன லுக்கு ஆளாக்கும். நகர விரிவாக்கம் என்ற பெயரில்  விளைநிலங்கள் களவாடப் படும். விவசாயத் தொழிலா ளர்களின் வாழ்வாதாரமான ஊரக வேலைத் திட்டம் பாதிக்கப்படும் என வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. தொடர்ந்து வட்டாட் சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.