districts

img

திருச்சி, பெரம்பலூரில் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா படத்திறப்பு

திருச்சிராப்பள்ளி,டிச,21- விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் தகைசால் தமிழருமான மறைந்த தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் திருச்சி, பெரம்பலூரில் டிசம்பர் 21 அன்று நடைபெற்றது. திருச்சியில் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் இளைஞர்கள் கட்சியில் இணையும் விழா மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலை மை வகித்தார். மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் லெனின் வர வேற்றார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், தோழர் என்.சங்கரய்யா உருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். அவர் பேசுகையில்,  மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப் பட்ட போது தூத்துக்குடி மாவட்டத் தில் மாணவர்களை திரட்டி ஊர் வலம் நடத்தியவர் சங்கரய்யா. மதுரை சதி வழக்கில் கைது செய் யப்பட்டவர் சுதந்திரத்திற்கு பின் தான் விடுதலை செய்யப்பட்டார். சாதி, மத பேதத்தை ஒழிக்க தனது குடும்பத்தையே சமத்துவபுரமாக மாற்றியவர் என்று கூறினார.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். இதில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செய லாளர்கள், தோழமை சங்கத்தினர் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னி லையில் இளைஞர்கள் 70 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  பெரம்பலூரில் படத்திறப்பு- வாச்சாத்தி வழக்கு வெற்றிவிழா தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் பெரம்பலூர் மாவட்டக்குழு சார் பில் துறைமங்கலத்தில் தோழர் என். சங்கரய்யா படத்திறப்பு மற்றும் வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட தலைவர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  டில்லிபாபு, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரன், மாவட்ட செயற் குழு எஸ்.அகஸ்டின், மருத்து வர் சி.கருணாகரன், விசிக தமிழ் மாணிக்கம் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.