districts

முறையாக கட்டப்படாத தடுப்பு சுவரை அகற்றக் கோரி சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, மே 12- திருச்சியில் முறையாக கட்டப் படாத தடுப்பு சுவரை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று மேயர் அன்பழகனிடம் மனு அளிக்கப் பட்டது. இதுதொடர்பாக கட்சியின் ஜங்ஷன் பகுதி செயலாளர் ரபீக்அஹமத் அளித்த மனுவில் தெரிவித்திருந்தாவது:  திருச்சி மாநகராட்சி 28-ஆவது வார்டிற்குட்பட்ட தென்னூர் வ.உ.சி சாலையில் அண்ணா நகர் 4-ஆவது கிராஸ் டீக்கடை அருகில் சுமார் 10 முதல் 15 அடி வரை கட்டப்பட் டுள்ள கரையோர கான்கிரீட் சுவர் கம்பிகள் கட்டப்படாமல் வெறும் சிமெண்ட், ஜல்லி, மணல் கலவை கொண்டு சுவர் எழுப்பி உள்ளனர்.  மழை பெய்தால் இந்த சுவர் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட இந்த சுவரை உரிய ஆய்வு செய்து சுவரை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.   மற்றொரு மனுவில், திருச்சி மாநகரில் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், வட்டாட்சி யர் அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளா கங்களில் வளர்க்கப்படும், சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூ சியும் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை தடுப்பூசியும் போட வேண்டும். மேலும் அரசு அலுவல கங்களில் வளர்க்கப்படும் நாய்க ளுக்கு உரிய மருத்துவ வசதிகள் மற்றும் உணவுகள் வழங்கி 15 நாட்களுக்கு ஒருமுறை குளிப் பாட்ட வேண்டும் என அவர் தெரி வித்திருந்தார்.  மேயரிடம் மனுவை அளித்த போது மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரேணுகா மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.