districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது!

அரியலூர், நவ.24- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இத்திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக அரியலூர் மாவட்டம் தா.பழூரில் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மீனா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா, பத்மாவதி, எஸ்.குமார், தியாகராஜன் மூத்த தலைவர் எஸ்.என். துரைராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  அரியலூரில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, எஸ்.மலர்கொடி, மூத்தத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.  ஜெயங்கொண்டத்தில் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்டு ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று உதவி செயற்பொறியாளர் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் மனு அளித்தார்.