தஞ்சாவூர், டிச.7 - விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கக்கூடிய, மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிர்ப்பந்திக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்வாரிய அலுவலகத்தில் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் பேசினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் மற்றும் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் - வெளிமடம் மின்வாரிய அலுவலகத்தில் சரளா செந்தில், பெருமகளூர் மின்வாரிய அலுவலகத்தில் வீ.கருப்பையா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கரூர் கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஒன்றியங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தோகைமலை ஒன்றியம் காவல்காரன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் ஏ.சுப்பிரமணியன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எ. பெருமாள் ஆகியோர் பேசினர். அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றிய செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.கணேசன் ஆகியோர் பேசினர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாயனூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஒன்றியச்செயலாளர் ஜி.தர்மலிங்கம் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.