districts

img

நான்கு வழிச்சாலைக்காக குடிசைகள் இடிப்பு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு, குடியிருக்க மாற்று இடம் வழங்கிடுக!

 மயிலாடுதுறை, பிப்.01- நான்கு வழிச்சாலை பணி யால் வீடுகளை இழந்த மக்கள் இழப்பீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செம்பனார் கோவில் ஒன்றிய செயலா ளர் கே.பி.மார்க்ஸ் தலைமை யில் தரங்கம்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.                                                                                                 விழுப்புரம் முதல் நாகை வரையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த சில வருடங்களாக நடை பெற்று வருகிறது.  காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரின் துணையோடு விவசாயிகளை ஏமாற்றி  சொற்ப விலைக்கு அவர்க ளிடமிருந்து விளைநிலங்க ளை  வாங்கி மிக தீவிரமாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நகாய் அதிகாரிகளும் சாலை பணியை செய்து வருகிற தனியார் ஒப்பந்த நிறு வனமும் ஆரம்பம் முதலே விவசாயிகளிடமும், குடியி ருப்புகளை இழந்த ஏழைகளிடமும் அராஜகப் போக்குடன் நடந்து வரு கின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் பல்வேறு போரா ட்டங்களை தொடர்ச்சியாக நடத்திவருகின்றன. நீதி மன்ற வழிக்காட்டுதலை மதிக்காமல் சட்டவிரோ தமாக பணிகள் நடந்து வருகிறது. குடியிருப்புகளை இடிக் கும் நகாய் அதிகாரிகள் இந்நிலையில்  அப்பராசப் புத்தூர், தலைச்சங்காடு பகு திகளில் 150 ஆண்டுகளுக் கும் மேலாக பல தலைமுறை களாக தனியார் பண்ணை யின் பெயரிலுள்ள இடத்தில் வீடுகளை கட்டி வசித்து வருகிறவர்களுக்கு 1971 மற்றும் 1972 ஆம் ஆண்டுக ளில் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. அந்த பகுதி வழியாக நான்கு வழிச்சாலை அமைவதால் அந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இழப்பீட்டை தராமல்  நகாய் அதிகாரிகள் தனியார் பண்ணைக்கு இழப்பீடு தந்துவிட்டதாகக் கூறி  11 குடியிருப்புகளை இடித்து வருகிறது. வீடு களை இழந்து வசிக்க இட மில்லாமல் தவிக்கும் 11 குடும்பங்களை சேர்ந்த வர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில்  தரங்கம் பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு   தனிவட்டாட்சியர் ராகவனிடம் உரிய இழப்பீ டும், குடியிருக்க மாற்று இட மும் கேட்டு வியாழனன்று மனு அளித்தனர். 

இழப்பீடு இல்லையெனில் போராட்டம்

பின்னர்  ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறு கையில், அதிகாரிகள் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவு வதற்கு பதிலாக காண்ட் ராக்ட் நிறுவனத்திற்கு பணி செய்வது போல செயல்படு கின்றனர்.தலைச்சங்காடு,அப்பராசப்புத்தூரில் தனியார் பண்ணையில் தலைமுறை தலைமுறையாக வேலை செய்ததற்காக வழங்கப்பட்ட அடிமனையில் குடிசை கட்டி வாழ்ந்து வருகிற அப்பாவி மக்களை அகற்றிவிட்டு இடத்தை அபகரிக்கும் நகாய் அதிகாரிகள் உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்காமல் தனியார் பண்ணைக்கு வழங்குகிற போக்கு எந்தவிதத்திலும் நியாயம் இல்லை, வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் 11 குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடும்,மாற்று இடமும் வழங்கவில்லையெனில் மார்க்சிஸ்ட் கட்சி போராட் டங்களை நடத்தும் என்று தெரிவித்தார்.