districts

img

சிபிஎம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த வண்டலூர் இ.மாரிமுத்து காலமானார்

நாகப்பட்டினம், நவ.12 - கீழ்வேளூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை பதவி வகித்த தோழர் இ.மாரிமுத்து காலமானார். நாகப்பட்டினம் மாவட் டம் கீழவெண்மணியை அடுத்த வண்டலூர் ஊராட்சி  மன்ற தலைவராக  இரண்டு  முறை பதவி வகித்தவர் இ.மாரிமுத்து (48). கல்லூரி காலங்களில் இந்திய மாண வர் சங்கத்தில் இணைந்து கல்வி நிலையங்களுக்கான போராட்டங்களை முன்னி ன்று நடத்தியவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி லும் தன்னை இணைத்து கொண்டு நாகை மாவட்டத் தில் திறம்பட பணியாற்றிய வர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்து  இன்று வரை கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய குழு உறுப் பினராக செயல்பட்டார். தற்சமயம் விதொச ஒன்றி யத் தலைவராக பணியாற்றி வந்த இவர்,

இரண்டு முறை  ஊராட்சி மன்ற தலைவராக வும் பதவி வகித்துள்ளார். சிபிஎம் முன்னெடுக்கும் அனைத்து களப் போராட்டங் களிலும் மாரிமுத்து முன்னிற் பார். தற்போது அவர்  ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இல்லா விட்டாலும் அந்த ஊராட்சி யின் அனைத்து நலன் சார்ந்த  நடவடிக்கைகளிலும் முன்னி ன்று செயல்பட்டார். வெள்ளியன்று மாலை அப்பகுதியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் பதிவு பணியில், மாரிமுத்து தோழர்களோடு ஈடுபட்டிருந்திருந்தார். அப் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், உட னடியாக தோழர்கள் அரு கில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள் ளனர். முதற்கட்டமாக திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், பிரேம் நாத், பிரகாஷ் ராஜ், மனோஜ்ராஜ் ஆகிய மூன்று  மகன்களும் உள்ளனர். அன்னாரது இறுதி நிகழ்வு சனிக்கிழமை அவருடைய  சொந்த கிராமமான வண்ட லூரில் நடைபெற்றது.  இதில், சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமி ர்தலிங்கம், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் என்.எம். அபுபக்கர், எம்.முருகை யன், ஏ.வேணு, ப.சுபாஷ் சந்திரபோஸ், கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன் மற்றும்  மாவட்டக் குழு, இடை கமிட்டி உறுப்பினர்கள் பலர்  செவ்வஞ்சலி செலுத்தினர்.