வேதாரண்யம், டிச. 15 - நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு ஒன்றியக் குழுவின் புதிய அலுவலகமான தோழர் ஜி.வீரையன் நினைவக திறப்பு விழா கரியாப்பட்டினத்தில் நடைபெற்றது. நாகை மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து கொடி யேற்றி வைத்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை. சுப்பிரமணியன் பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். மூத்த தோழர் ஏ.நடராசன், தோழர் ஜி.வீரையன் படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.வேணு, தெற்கு ஒன்றிய செயலாளர் வி. அம்பிகாபதி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ. வெற்றியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.பன்னீர்செல்வம், மாதர் சங்க ஒன்றிய தலைவர் வசந்தா, செயலாளர் வெண்சங்கு, வாலிபர் சங்க தலைவர் பிரபு, செயலாளர் முரு கானந்தம் மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.