தஞ்சாவூர், அக்.25 -
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் (67) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது உடல், சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உஞ்சியவிடுதி கிராமத்தில் வைக்கப்பட்டது. இவரது உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.வாசு, கே.ராமசாமி, துரை.ஏசுராஜா, ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.