districts

img

தோழர் சந்திரா காலமானார்: சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

தஞ்சாவூர், ஏப்.6- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலா ளர் தோழர் ஏ.சந்திரா உடல் நலக்குறைவு காரணமாக ஏப்.4 அன்று காலமானார். அவ ருக்கு வயது 64. தோழர் ஏ.சந்திரா கடந்த சில மாதங் களாக உடல் நலக் குறைவு காரணமாக, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியா ழனன்று, பூதலூர் அருகே பாதிரக்குடியில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழராக, அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாள ராக பணியாற்றியவர். கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினராக தனது  இறுதிக் காலம் வரை செயல்பட்டவர். தோழர் ஏ.சந்திராவின் கணவர் அரங்க ராஜன் தியாகி என்.வி. கலைக்குழு உரு வாக காரணமாக இருந்த மிகச்சிறந்த பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.  தோழர் ஏ.சந்திராவின் இறுதி நிகழ்ச்சி கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், கட்சியின் மூத்த தலைவர் என்.சீனிவா சன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், கே. பக்கிரிசாமி, என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி மற்றும் வெ.ஜீவகுமார், சா. ஜீவபாரதி, திருச்சி புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலர் வசந்தி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி மற்றும் பல்வேறு அரங்க தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.