பெரம்பலூர்/திருவாரூர், ஜன.31 - 2004 ஆம் ஆண்டு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி உதவித் தொகை கேட்டும், பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் மாணவர்கள் மாபெ ரும் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதில் பள்ளி நிர்வாகம், பால்ராஜ் மற்றும் விக்னேஷ் என்ற இரண்டு மாண வர்களை பள்ளியிலிருந்து நீக்கம் செய்து டிசி வழங்கியது. இதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதனால் அன்றைய ஆளும் அதிமுக அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய வட்டச் செயலாளர் வடுகநாதன், அப்போதைய வாலிபர் சங்க மாவட்ட செயலாளரும், தற்போ தைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான பி.ரமேஷ் மற்றும் மாணவர்கள் பால்ராஜ், விக்னேஷ் மற்றும் விக்னே ஷ்சின் தாய் பூங்கொடி ஆகியோர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு 2007 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கும்போதே விக்னேஷின் தாயார் பூங்கொடி இயற்கை எய்தினார். பால்ராஜ் மீதான வழக்கு குழந்தைகள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசா ரணை நடைபெற்று, பின்பு விடுதலை செய்யப்பட்டார். 2024 டிசம்பர் மாதம் வழக்கிலிருந்து விக்னேஷை விடுதலை செய்து குற்றவியல் நடுவர் நீதி மன்றம்-1 உத்தரவிட்டது. இந்நிலையில், வியாழனன்று வடுகநாதன், ரமேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 நீதிபதி, ரமேஷ், வடுகநாதன் ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். வழக்கறிஞர்களுக்கு பாராட்டு இந்த வழக்கில் மாணவர்களுக்காக வும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக் காகவும் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஸ்டாலின், வழக்கறிஞர் அருண் ஆகியோரை பாராட்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புத்தகம் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலை யரசி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எட்வின், குன்னம் வட்டச் செயலாளர் செல்லமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருவாரூர் மாவட்டம், நன்னி லம் பேருந்து நிலையம் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினால் வழக்குப் பதியப்பட்டு, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நன்னிலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரு கிறது. இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, டி.வீரபாண்டியன், நன்னிலம் ஒன்றி யச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கே.எம்.லிங்கம், எஸ்.எம்.சலா வுதீன் ஆகியோர் மீது வியாழக்கிழமை இறுதி விசாரணை நடைபெற்றது. பின்னர், நீதி அரசர் பாரதிதாசன் அனை வரையும் விடுதலை செய்தார். மக்களுக்கான போராட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விடுதலை பெற்ற தோழர்களுக்கும், வழக்கை எடுத்து நடத்திய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.