districts

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்கலாம்

பொன்னமராவதி, மே 12-  ஊரை விட்டு ஒதுக்கி  வைக்கப்பட்ட 21 குடும்பத்தி னரும் திருவிழாவில் பங்கேற்க வேண்டுமென சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டை யாண்டிபட்டி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 21 குடும்பத் தினர் சார்பாக நல்லு, முரு கன், நல்லான், ராஜாமணி, குமார், மலர்கொடி, மீனாட்சி,  மீனா, சித்ரா உள்ளிட்டோர் சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம், “ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 21  குடும்பத்தினரிடமும்  வரி வசூல் செய்யாமல், ஊர்  திருவிழா நடத்த இருப்பதா கவும் இது விஷயத்தில் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் மனு அளித்திருந்தனர். இது தொடர்பான செய்தி காட்சி ஊடகங்களில் வெளி யான நிலையில், மே 11  (சனிக்கிழமை) பொன்னமரா வதி வட்டாட்சியர் சாந்தா முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பினரும் பங்கேற்றனர். முடிவில் மே 13, 14 ஆகிய நாட்களில் மேற் படி கிராமத்தில் நடைபெ றும் திருவிழாவின் ஒரு பகுதியாக நடக்கும் நாடகம்  மற்றும் கோவில் திருவிழா வில் அனைவரும் கலந்து கொள்ள எந்த வித ஆட்சேப ணையும் இல்லை. இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் திருவிழாவினை சிறப்பான முறையில் நடத்த  வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.  திருவிழா தொடர்பாக வரி மற்றும் இறப்பிற்கான கட்டமொய்பணம் வாங்கு வது தொடர்பாக, 21 குடும் பத்தினரின் உரிமைகளை மறுக்கும் வகையில், ஏதே னும் சட்ட ஒழுங்கு பிரச்சனை  ஏற்படுத்தும் நபர்களின் மீது  குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 107 இன்கீழ்  நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் முடிவு செய்யப் பட்டது.  கூட்டத்தில் 21 குடும் பத்தினர் சார்பாக நல்லு, முருகன், நல்லான், ராஜா மணி ஆகியோரும் ஊர் தரப்பில் அடைக்கண், வெள் ளைச்சாமி, கருத்தான், சிங்காரம், ஆறுமுகம் மற்றும்  துணை வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் பங்கேற்றனர்.