அரியலூர், ஆக.29- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே பிள்ளைப்பாளை யம் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சொக்க லிங்கம் தலைமையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஜெயங்கொண் டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆகியோர் உரை நிகழ்த்தினர். போராட்டத்தில் ஆர்.ரவீந்திரன், எஸ்.மீனா, எஸ்.குமார், வி.வீரப்பன், கே.கண்ணன், ஈ.மைதீன்சா, ஆர்.கோவிந்தராஜ், கே.என்.பசுபதி, சிஐடியு ஆட்டோ சங்க கௌரவ தலைவர் என்.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் கொல்லாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும், அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், ஜெயங்கொண்டம் - முட்டம் வரை குறுக்குரோடு. கொல்லாபுரம், ஈச்சம்பூண்டி வழித்தடத்தில் இயங்கி வந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும், பல தலைமுறையாக கீழத்தெரு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும், காட்டுக் கொல்லையிலிருந்து கங்கவடங்க நல்லூர் செல்லும் பாதையில் இருபுறமும் வடிகால் வசதி செய்து தர வேண்டும், கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் புதிதாக கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முடிவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில குழு உறுப்பி னர் எஸ்.வாலண்டினா முடித்து வைத்தார்.போராட்டத்தில் ஜி.ஆகஸ்வீரன், எஸ்.சங்கர், சிஐடியு பன்னீர்செல்வம், கே.ராஜா, எ.சுந்தரமூர்த்தி, ஆர்.மதியழகன், எஸ்.ரமேஷ், கார்த்திக், துரையப் பன், ஜி.இளையராஜா, எஸ்.தமிழ்ச்செல்வி, எ.மாலா, ஈ.ராஜேஸ் வரி, எம்.வனிதா, சங்கீதா, ராதா, ராதிகா, சிஐடியு ஆட்டோ தொழிலா ளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.