திருச்சிராப்பள்ளி, ஏப்.7- இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் மதிமுக வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஏப். 17 வரை, 300 குழுக்கள் ஒரு லட்சம் வீடுகளுக்கு சென்று, துண்டுப் பிரசுரம் கொடுத்து வாக்குச் சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனொரு பகுதியாக ஞாயிறன்று தென்னூர் உழவர் சந்தை பகுதி யில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், பகுதி செயலாளர் ரபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையிலும், அரியமங்கலம் உக்கடை பகுதியில் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, பகுதி செயலா ளர் சுரேஷ் தலைமையிலும், பாலக்கரை பாரதி நகர் பகுதியில் மாவட்டக் குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையிலும் வாக்குச் சேகரித்தனர். முதலியார் சத்திரம் பகுதியில் மாவட்டக் குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையிலும், மலைக்கோட்டை என்.எஸ்.பி ரோடு பகுதியில் பகுதிச் செயலாளர் லெனின் தலைமையிலும், சுப்ரமணியபுரம் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், மணிமாறன், பகுதிச் செயலாளர் விஜயேந்திரன் தலைமையிலும் வாக்குகள் சேகரித்தனர். மணிகண்டம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், பகுதிக்குழு உறுப்பினர் வேலுசாமி தலைமையிலும், திருவெறும்பூர் தாலுகாவில் தாலுகா செயலாளர் மல்லிகா, பகுதிக் குழு உறுப்பினர்கள் மகேந்திரன், ரவி, மல்லிகா ஆகியோர் தலைமையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் வீடு வீடாகச் சென்று வேட்பாளர் துரை.வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்.