districts

img

பாசன வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் பாசன வாய்க்கா லில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை கொட்டு வதற்கு தனியாக குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதி யான பெருமாள்கோயில்-லெட் சத்தோப்பு பகுதியின் பல இடங்க ளில் பாசன வாய்க்காலில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு கள் கொட்டப்பட்டுள்ளன.  ராஜாமடம் பாசன வாய்க்கா லில் இருந்து, பிரிந்து, சாந்தாங் காடு, வெட்டிக்காடு, பெரு மாள்கோயில், லெட்சத்தோப்பு வழியாக காவிரி கிளை வாய்க் கால் சென்று, நயினாங்குப்பம் ஏரியில் சென்று கலக்கிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலில், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், மற்றும் இறைச்சிக் கழிவுகள் ஒதுக்குப்புறமான இடங்களில் கொட்டப்படுவ தோடு, வீடுகளில் சேரும் குப்பை களும், பொறுப்பற்ற பொதுமக்கள் சிலரால் கொட்டப்படுகிறது.  

இதனால், பாசன வாய்க்கால் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன், குடியிருப்பு பகுதியில் சுகாதாரச் சீர்கேடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக் கோட்டை ஒன்றியக்குழு உறுப்பி னர் முருக.சரவணன் கூறிய தாவது, சி.எம்.பி வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதால், பாசன வாய்க்கால் சாக்கடை வாய்க்காலாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகளை கொட்டாமல், பொதுமக்கள் வாய்க்காலில் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  போதிய அளவிலான குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும். தேங்கி நிற்கும் குப்பைக் கழிவுகளால் காவிரி நீர் கருப்பு நிறத்தில் சாக்கடை போல செல்கிறது. வாய்க்காலில் கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகளை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் குப்பைகளை கொட்டாத வண்ணம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். இதுகுறித்து ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்றார்.