கும்பகோணம், பிப்.2- ஆளுநர் ரவி வருகையை கண்டித்து கும்பகோணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பக ரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா விற்கு, மாநிலத்தில் பல்வேறு சர்ச்சையை எழுப்பும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குடும்பத்துடன் வந்தார். முன்னதாக காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் வந்த ஆளுநர் ரவி, திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கும்பகோணம் அருகே உள்ள திருபு வனத்திற்கு வந்தார். அப்போது சாலை மார்க்கமாக வர திட்டமிட்டிருந்த வழித் தடம், திடீரென மாற்றப்பட்டு மாற்றுப் பாதையில் வந்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டும், வெண்மணி தியாகங்களை கொச்சைப்படுத்தியும் பேசிய ஆளுநர் ரவி வருகையை கண் டித்து கும்பகோணம் செட்டிமண்டபம் அருகே உள்ள புறவழிச் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என தெரிவித்த நிலையில், முழக் கங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலை மையிலான போலீசார், ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், சி.ஜெயபால், அருள்அரசன், மாநகரச் செயலாளர் கே.செந்தில் குமார், கும்பகோணம் ஒன்றியச் செய லாளர் கணேசன், மாவட்ட குழு உறுப்பி னர் எம்.கண்ணன், மாமன்ற உறுப்பி னர் செல்வம், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆளுநர் வருகையையொட்டி வழித் தடங்கள் மாற்றப்பட்டதால், போக்கு வரத்து இடையூறு ஏற்பட்டது. இத னால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.