districts

img

வடக்கு புதுக்குடியில் மாட்டுவண்டி எல்லை பந்தயம்

அறந்தாங்கி, ஜூலை 18-

     புதுக்கோட்டை மாவட் டம் வடக்கு புதுக்குடி கிரா மத்தில் உள்ள ஸ்ரீமகாகாளி யம்மன் ஆலய 18 ஆம் ஆண்டு  திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி  எல்லை பந்தயம் நடைபெற் றது.  

    இந்த போட்டியை மண மேல்குடி ஒன்றிய பெருந் தலைவர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் நடு மாடு, பூஞ்சிட்டு மாடு என  இரு பிரிவுகளாக நடைபெற் றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.  

     போட்டியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்த னர். இதில், நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்த யத்தில் முதல் மூன்று இடங் களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 94 ஆயி ரம் ரொக்கப் பரிசும் கோப் பைகளும் வழங்கப்பட்டன.