districts

img

மூன்று வாரங்களுக்குள் கோவிட் தீவிரமாக பரவ வாய்ப்பு

பத்தனம்திட்டா, ஜன.16- கேரளத்தில் அடுத்த மூன்று வாரங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதி கரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தற்போது 78 கோவிட் கிளஸ்டர்கள் செயல் பட்டு வருவதாகவும், அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து சனியன்று (ஜன.15) செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:  கோவிட் நெறிமுறைக்கு இணங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். சுகாதாரத்துறை தேவையான அறிவுரை களை வழங்கி வருகிறது. அறிகுறி உள்ள வர்களை பரிசோதிக்க வேண்டும். மாநி லத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றார் அமைச்சர். மோனோக்ளோனல் ஆன்டிபாடி தேவைக்கேற்ப வாங்கப்படு கிறது. தற்போது, மாநிலத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. இந்தச் செய்தியின் பின்னணியில் மருந்து நிறுவனங்களின் அழுத்தம் இருப்பதாக சந்தேகிக்கம் உள் ளது என்றும் அமைச்சர் கூறினார். 15-18 வயதினருக்கு 51 சதவிகிதம் தடுப்பூசி கேரளத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற் பட்டவர்களுக்கு (51 சதவிகிதம்) கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மொத்தம் 7,66,741 குழந்தைகளுக்கு தடுப் பூசி போடப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97,458 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி யது. ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளான குழந் தைகளுக்கு அதிகபட்ச எண்ணிக்கையில் விரைவாக தடுப்பூசி வழங்குவதற்காக ஒரு  சிறப்பு இயக்கம் மூலம் தடுப்பூசி வழங்கப் படுகிறது. 12 நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட தாக அமைச்சர் கூறினார்.