districts

img

தியாகி வள்ளியம்மை நினைவு தினம்

மயிலாடுதுறை, பிப்.22-  தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109  ஆவது நினைவு தினத்தை யொட்டி தில்லையாடி யிலுள்ள நினைவு மண்ட பத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி புத னன்று அணிவித்து மரியாதை செய்து, மணிமண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள், ஓவியங்க ளை பார்வையிட்டார்.  கோட்டாட்சியர் அர்ச்ச ணா, வட்டாட்சியர் புனிதா, செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூ ராட்சி தலைவர் சுகுணசங்கரி உள்ளிட்டோர் மாலை அணி வித்தனர்.  பின்னர் தியாகிகள், வாரிசுதாரர்கள் நலச்சங் கத்தின் சார்பில் தில்லையாடி முதல் மயிலாடுதுறை வரை  நடைபெற்ற  சுடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.  சிபிஎம் மரியாதை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர் காபிரியேல், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழ்வாசகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், வில்லியம், திருவிடைக்கழி கிளை செயலாளர் ஜோதி பாசு உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.