தஞ்சாவூர், ஆக.17 - 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவாகர், (27), பிரவீன் (20), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக ஒரத்த நாடு அனைத்து மகளிர் காவல் நிலை யத்தினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், கும்பல் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணை அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்து வர்கள் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திரும்பி அனுப்பியுள்ளனர். பிறகு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இளம் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் தன்னிடம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலம் அடிப்படையிலும், அரசு தரப்பு வழக்குரைஞர் அளித்த தக வலின் பேரிலும், ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அழகேசன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், “சட்டப்பிரிவு 377 பி.என்.எஸ்.எஸ்.-இன்படி, கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங் களினால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச் சைக்கு வரும் போது அவர்களுக்கு முதலுதவி அல்லது இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழி வகை செய்து, அத்தகைய நிகழ்வு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லாமல் சிகிச்சைக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தவறியுள்ளீர்கள். எனவே, அன்றைய தினம் மருத்துவ மனையில் பணியில் மருத்துவராக இருந்தவர் மீது ஏன் பிரிவு 200 பி.என்.எஸ்.-இன்படி வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கக் கூடாது. மேலும், சிகிச்சை அளிக்க மறுப்புக் கான காரணம் குறித்து வரும் 27 ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண் டும்” இவ்வாறு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு விளக்கம் கேட்கும் நோட்டீசில் கூறப் பட்டுள்ளது.