districts

திருச்சி முக்கிய செய்திகள்

காலமானார்

கும்பகோணம், ஜூலை 9- சிற்பக் கலா நிதி  என்ற தேசிய விருது  பெற்றவரும் புகழ்  வாய்ந்த கும்பகோணம் கவின் கலை கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வரும், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓவியர் சங்க கும்பகோணம் வட்டக் கிளை புரவலருமான வித்யாசங்கர் ஸ்தபதி யின் மனைவி ராஜரா ஜேஸ்வரி அம்மையார் (62) வயது மூப்பு காரண மாக இயற்கை எய்தி னார். அம்மையாரின் இறப்புச் செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், கும்பகோணம் மாநகரச்  செயலாளர் செந்தில் குமார், அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் உள்ளிட் டோர் அன்னாரது உட லுக்கு அஞ்சலி செலுத்தி னர்.

தேனீ வளர்ப்பு, பராமரிப்பு பயிற்சி

தஞ்சாவூர், ஜூலை 9-  தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் இணைந்து தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி பட்ட றையை நடத்தினர்.  நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எம்.விஜயா, துணை முதல்வர் ஆர்.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தஞ்சாவூர் மாவட்ட தொ ழில் முனைவோர் மேம் பாட்டு மைய ஒருங்கி ணைப்பாளர் ஆர். அமர்நாத் உரையாற்றி னார். மதுரை விபிஸ் இயற்கை தேனீ பண்ணை நிறுவனத்தின் இயக்குநர் ஜோஸ்பின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நுண்ணுயிரியல் துறைத்தலைவர் எல்.பிரின்ஸ் சிறப்பு விருந்தி னர்களை அறிமுகம் செய்து வைத்தார். முன்ன தாக நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரிய ரும், தொழில் முனை வோர் மேம்பாட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாள ருமான பி.மதன்ராஜ் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் வி.வெற்றி வேல் நன்றி கூறினார்.  இதில் பல்வேறு துறை களை சார்ந்த 160 மாண வர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

சாலையில் நின்ற டிராக்டர் மீது பைக் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூர், ஜூலை 9-  டிராக்டர் மீது பைக் மோதியதில், வேலைக்குச் சென்று  திரும்பியவர் பலியானார்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த நெல்லி யடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி - இந்திரா தம்பதி யின் மூத்த மகன் குருமூர்த்தி என்ற நீலகண்டன் (32). இவ ருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவர் பணி முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக பட்டுக்கோட்டை சாலையில், ஆண்டவன்கோயில் நெல் கொள்முதல் நிலையம் அருகே  வந்து கொண்டிருந்தார்.  அப்போது நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டை களை இறக்கி விட்டு சாலையில் டிராக்டர் ஒன்று நிறுத்தப் பட்டிருந்தது. அந்த இடத்தில் இருளாக இருந்ததால், டிராக்டர்  நிற்பது தெரியாமல் குருமூர்த்தி சென்ற பைக் அதன் மீது  மோதியதில் சம்பவ இடத்திலேயே தலையில் காயம டைந்து உயிரிழந்தார்.  தகவலறிந்த பேராவூரணி காவல்துறையினர் அவரது சட லத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக கொண்டு சென்றனர். இங்குள்ள நெல் கொள் முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வரும்  விவசாயிகள் டிராக்டர்களை சாலையில் நிறுத்துகின்றனர்.  மேலும், அந்த இடத்தில் இருளாக இருப்பதால் அடிக்கடி  விபத்து ஏற்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல் பணி  முடிந்து வீடு சென்ற ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே டிராக்டர்களை சாலையில் நிறுத்தாமல் இருக்கவும், அந்த இடத்தில் மின்விளக்கு வசதி களை ஏற்படுத்தவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பருத்தி மறைமுக ஏலத்தில் உரிய விலை கிடைக்கவில்லை
விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜூலை 9- மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 15 ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் பஞ்சு எடுக்கும்  பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.  தனியார் வியாபாரிகள் குறைந்த  விலைக்கு பருத்தி பஞ்சை கேட்பதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டு மென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மயிலாடுதுறை மாவட் டத்தில் மயிலாடுதுறை, செம்ப னார்கோவில், சீர்காழி, குத்தாலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த சில வாரங்களாக மறைமுக ஏலத்தில் பருத்தி ஏலம் நடந்து  வருகிறது.  இந்நிலையில், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  நான்காவது வாரமாக திங்களன்று மறை முக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் குவிண்டால் 5,500 முதல் 6,500  வரைக்கு மட்டுமே ஏலம் போனதாக வும், கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,809, குறைந்த பட்சமாக ரூ.7 ஆயிரம் என்றும், சராசரியாக 7,400 ரூபாயக்கும் ஏலம் போனது.  வெளிமாநில வியாபாரிகள் அதிக  விலைக்கு ஏலம் கேட்டதால், உள்ளூர்  வியாபாரிகள் பிரச்சனையில் ஈடுபட்ட னர். இதனால் திங்களன்று மாலை  நடந்த பருத்தி ஏலத்தில் வெளிமாநில வியாபாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை. இதனால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தியதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.