districts

img

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம், ஆக. 8- தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்குமுறை. விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை   விற்பனைக் கூட கண்காணிப்பாளர்  பிரிய மாலினி  தலைமை வகிக்க, மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். பருத்தி ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் . இருந்து  மொத்தம் 2393 விவசாயிகள் 3200 குவிண்டால் பருத்தி  எடுத்து வந்தனர்.    கும்பகோணம், செம்பனார் கோவில்,பண்ருட்டி, விழுப்புரம்,மகுடஞ்சாவடி,தேனி, விருதுநகர்,கொங்க ணாபுரம், தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 13 வணிகர்கள் கலந்துக் கொண்டனர் பருத்தியின் மதிப்பு ரூ 2.24 கோடி .இதில் தனியார் வணிகர்கள் அதிகப் பட்சம்  குவிண்டாலுக்கு ரூ.7352  குறைந்தப் பட்சம்  ரூ.6871, சராசரி ரூ.7009 என விலை நிர்ணயம் செய்தனர்.