கும்பகோணம், ஜூன் 16-
கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் பகுதிகளில் பருத்தி மறைமுக ஏலம் பிரதிவாரம் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தஞ்சாவூர் விற்ப னைக்குழு தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2023 ஆம் ஆண்டு பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திட்டை, கோபுராஜபுரம், வடக்கு நாயக்கன் பேட்டை, தெற்கு நாயக்கன்பேட்டை, உத்தமதானபுரம், உமையாள்புரம், மெலட்டூர், முத்தூர், மகாஜனக்குடி, கொற்கை, சிவபுரம், நாச்சியார்கோவில், சேங்க னூர், பட்டம், மட்டியூர். கூனஞ்சேரி, மணிக்குடி ஆகிய சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருப்பனந் தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலமானது பிரதிவாரம் புதன் கிழமை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், வியாழக் கிழமை திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், வெள்ளிக்கிழமை பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் முற்பகல் 10 மணியளவில் நடை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.