திருவாரூர், ஜூன் 25- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நன்னி லம் ஒன்றியக் குழு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்னிலம் அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ஜெ.கக்கன் தலைமை வகித்தார். நன்னிலம் ஆற்றுப் பாலம் அருகிலிருந்து பேரணியாக கோரிக்கைகளை முழங்கியவாறு சென்று மருத்துவமனை வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன், ஒன்றியச் செயலாளர் கே.எம். பாலா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சிபிஎம் நன்னி லம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், வாலிபர் சங்க ஒன்றிய பொருளாளர் ஜெ.ரஞ்சித், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வெகுஜன அரங் கத்தினர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த மருத்துவமனை அலுவலர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உதவியாளர்கள், மருந்தாளுநர்கள் பணியில் அமர்த்த படுவார்கள். மகப் பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக பேரூராட்சி தூய்மை காவலர்களை கொண்டு கழிவறை மற்றும் அனைத்து வார்டுகளும் காலை, மாலை என இரு நேரமும் தூய்மைப் படுத்தப்படும். ஒரு மாதத்திற்குள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களை பணியில் அமர்த்து வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மருத்துவ மனையில் உடனடியாக நிறுவப்படும். மருத்துவமனை முழுவதும் கழிவுநீர் தேங்கி கிடந்த நிலையில், அவை சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து கண்கா ணிக்கப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக மருத்துவ இணை இயக்குநர் உறுதி யளித்ததன் அடிப்படையில் போராட்டம் நிறைவு பெற்றது.