districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மயிலாடுதுறை, டிச. 5 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழு  கூட்டத்தில், மாற்றுத்திற னாளி களுக்கான வேலை வாய்ப்பில் 5  சதவீதம் இடஒதுக்கீடு மற்றும்  தனியார் (ம) தொழிற்நுட்ப நிறு வனங்களில் மாற்றுத்திறனா ளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பட்சத்தில் மற்ற பணியா ளர்களை போல மாற்றுத்திறனா ளிகளுக்கும் சம உரிமை வழங்கு வது தொடர்பாக விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக உதவி உபகர ணங்கள் மாற்றுத்திறனாளி களுக்கு  சென்றவடைவது குறித்து அனைத்து துறைகள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சம்பந் தப்பட்ட அனைத்து மாற்றுத்திறனா ளிகளுக்கும் அரசின் உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களின் தாளா ளர்கள், மகா ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய ஆரம்ப கால பயிற்சி மையம், மனவளர் சிறப்பு பள்ளி தரங்கம்பாடி, அருமை இல்லம், மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி சோழம்பேட்டை, மயிலாடுதுறை கார்டன் மன நல காப்பகம். திட்டை சீர்காழி அன்பாலம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி ஆகிய பள்ளிகளின் பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள் நல சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். அக்கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த  அலுவலர்களிடம் உரிய பரிசீல னைக்கு பின்னர் தீர்வு காண அறி வுறுத்தப்பட்டது. பின்னர், மயிலாடுதுறை வட்டம்  கடக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம் என்பவர் கவனிக்க ஆளில்லாத காரணத்தினால் சோழம்பேட்டை அருமை இல்லத்தில் தங்குவ தற்காக சேர்க்கப்பட்டார் என்றார்.