districts

img

கூட்டுறவு மேம்பாட்டுக் கண்ணோட்ட கருத்தரங்கம்

மயிலாடுதுறை, ஜூலை 12-

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்  லூரியில் கூட்டுறவு மேம்பாட்டுக் கண்ணோட்டம் குறித்த தேசிய கருத்தரங்கம் புதனன்று நடை பெற்றது.

    த.பே.மா.லு கல்லூரி, கூட்டுற வுத்துறை மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இக்கருத்த ரங்கிற்கு கூட்டுறவுத் துறை தலை வர் முனைவர் ராஜா சாலமன் தலைமை வகித்தார்.  

   கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் அருள் மரியநாதன் நினைவாக நடை பெற்ற கருத்தரங்கை கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார் துவக்கி வைத்து புத்தகங்களை வெளியிட்டார். கூட்டுறவுத் துறையின் முன்னாள் மாணவரும், தஞ்சாவூர் ஆலய ஆயருமான ஜேக்கப் ஜெயராஜ் உரையாற்றினார்.

   இந்த தேசிய கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்கள், மாவட்  டங்களில் உள்ள பல்கலைக்கழ கங்களில் பணியாற்றும் பேராசி ரியர்கள் உரையாற்றினர். ஏராள மான மாணவர்கள் கலந்து கொண்  டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.