districts

img

சோழவித்தியாபுரம் ஊராட்சியில் இறுதிச் சடங்கிற்கு கூலர் பாக்ஸ், நாற்காலி இலவசம்

சோழவித்தியாபுரம் ஊராட்சி யில் இறப்பு நிகழ்ந்த வீடு களுக்கு, ஊராட்சியின் சார்பில் இலவச மாக கூலர் பாக்ஸ், நாற்காலி வழங்கும்  நிகழ்வை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சி 3200 மக்கள்தொகை கொண்டது. 820  குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வரு கின்றனர். இங்கு மரணமடைந்தவர் உடலை, மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு போதுமான வசதிகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதைக்  கருத்தில் கொண்டு சோழவித்தியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி தமிழ்ச்செல்வம் எடுத்த சிறந்த முயற்சி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள் ளது. கிராமங்களில் ஏதேனும் ஒரு வீட்டில்  இறப்பு நிகழ்ந்து விட்டால், ஒரு நாளோ  அல்லது இரண்டு நாட்களோ உடலை  வைத்திருந்து தகனம்/அடக்கம் செய்வது  வழக்கம். அப்படி வைக்கப்படும் உடல் களை, வெறும் தரையில் கிடத்துவது, நாற்காலியில் அமரச் செய்வது, மேஜை யில் படுக்க வைப்பது என்ற நிலை உள்ளது. இதனால் துக்க நிகழ்விற்கு வரு பவர்களுக்கு, இறந்தவரின் உடலில்  இருந்து வெளிவரும் நச்சுச் கிருமி களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிர்ப்பதற்காக உடலை கூலர் பாக்ஸில் வைப்பது நடை முறையில் உள்ளது.

இந்த கூலர் பாக்ஸை முதலில் வசதி  படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் எல்லோரும் பயன் படுத்தும் வகையில் பொருளாதாரச் சூழல் ஏற்றதாக இல்லை. இன்றுவரை  கிராமங்களில் சில இறப்பு வீடுகளில் உயிரற்ற உடல்கள் திறந்தவெளி யில்தான் வைக்கப்படுகின்றன. ரூ.3000 முதல் 5000 வரை செலவு செய்தால் தான் கூலர் பாக்ஸ் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. ஏழை-எளிய மக்கள் கூலர் பாக்ஸை வாடகைக்கு எடுக்க இயலாத நிலை இன்னும் தொடர்கிறது. இனி சோழவித்தியாபுரம் ஊராட்சி யில் வாடகைக்கு கூலர் பாக்ஸும், நாற் காலியும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுமட்டுமின்றி, ஊராட்சி சார்பாக அரசு கொடுக்கும் ஈமக்கிரியை தொகை ரூ.5 ஆயிரம் உடனடியாக பய னாளர் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு விடுகிறது. இதன் மூலம் வீடுகளில் இறப்பை சந்திக்கும் மக்கள் பணத் தேவைக்கு அடுத்தவரை நாட வேண்டிய அவசியம் இருக்காது.  சோழவித்தியாபுரம் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கும் மக்களே அதிகமாக உள்ள னர். நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக முறை வென்றுள்ளது. தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் கோமதி மற்றும் அவருடைய கணவர் தமிழ்ச்செல்வம் ஆகிய இருவரும் இந்திய மாணவர் சங்கத்தில் பணிபுரிந்த வர்கள்.

இவர்கள், சாதிப் பெயரில் உள்ள குளங்களின் பெயரை மாற்றி தீர்மானம் முன்மொழிந்தனர். வண்ணான் குளம் ‘நெய்தல்’ குளமாகவும், பரியாரி குட்டை  ‘அல்லி’ குளமாகவும், கோனார் குட்டை  ‘அமுத’ குட்டையாகவும், வெட்டியான் குட்டை ‘கீழத்தெரு’ குளமாகவும், ஆண்டிக் குட்டை ‘அரசன்’ குட்டையாகவும், கஸ்தூரிநாயக்கன் குளம் ‘கஸ்தூரி அம்மன்’ குளமாகவும் பெயர் மாற்றப் பட்டுள்ளது.  இதுகுறித்து சோழவித்தியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி தமிழ்ச் செல்வம் கூறுகையில், “இறப்பு வீடு களுக்கு சென்றால் ஒரு மலர்மாலை வாங்கி உடலுக்கு வைத்துவிட்டு பத்து நிமிடம் அவர்கள் வீட்டில் அமர்ந்துவிட்டு வந்து விடுவது வழக்கம். என்னுடைய கிராமத்தில் சில வீடுகளில் கூலர் பாக்ஸ்  வைப்பதும், பல வீடுகளில் அதுபோன்ற  கூலர் பாக்ஸ் இல்லாமல் திறந்தவெளி யில் உடலை வைத்து எடுத்துச் செல்வ தும் வழக்கமாக இருந்தது.  இந்நிலை மாற வேண்டும் என்ற  நோக்கத்தோடு, ஊராட்சியில் உள்ள  அனைத்து வீடுகளும் துக்க நிகழ்வு களில் கூலர் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, லயன்ஸ் கிளப் நிர்வாகத்தினரை அணுகினேன். அவர் கள் எங்கள் ஊராட்சியின் நலன்கருதி ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள கூலர் பாக்ஸ் மற்றும் 50 நாற்காலிகள் வழங்கி னர். இனி எங்கள் ஊராட்சியில், யார் வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் 50 நாற் காலிகளும், கூலர் பாக்ஸும் இலவச மாக கொடுத்து விடுவோம்” என்றார். - ஆதி.உதயகுமார்