அறந்தாங்கி, அக்.27 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி யில் 40 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் ச.குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கந்தர்வகோட்டை அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் முதல்வர் பொறியாளர் தமிழ் செல்வம் 90 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பச்சலூர் அரசுப் பள்ளி தலை மையாசிரியர் முனைவர் ஜோதிமணி சிறப்பு ரையாற்றினார். அனைத்து துறைத் தலை வர்கள், முதல்வரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் விரிவுரையா ளர்கள் கலந்து கொண்டனர்.