புதுக்கோட்டை, நவ.22 - திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவ ருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன் கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிளிக்குடி கிராமம் எல்லைப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (34). இவர் கடந்த 2019-இல் தனது உறவுக்காரப் பெண் ஒரு வரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்தப் பெண் கருவுற்றார். தொடர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டி பணம், நகைகளைப் பறித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ரெங்கசாமியைக் கைது செய்த னர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி எஸ்.ஜெயந்தி புதன்கிழமை தீர்ப்பளித்தார். கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக குற்றவாளி ரெங்க சாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், ஏமாற்றிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தார். சிறைத் தண்டனையை குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளி ரெங்கசாமி ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.