ஆட்குறைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் காத்திருப்புப் போராட்டம் நான்காவது நாளாக நீடித்தது. இவர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள். சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.