திருச்சிராப்பள்ளி, அக்.10 - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், டெக் னிக்கல், அலுவலகம் என அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள 20 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமனம் செய்ய கோரப்பட்டுள்ள டெண்டர்களை திரும்பப் பெற வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிய மிக்கக் கூடாது. நிரந்தரப் பணியா ளர்களை நியமனம் செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் செவ்வாயன்று போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவல கம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மண்டல தலைவர் கருணாநிதி, மண்டல துணைத் தலைவர் சண்முகம், மண்டல பொரு ளாளர் சிங்கராயர், துணை பொதுச் செயலாளர்கள் பாலசுப்ரமணியன் முருகன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் நிறைவுரையாற்றி னார். சங்க பொதுச் செயலாளர் மாணிக் கம் நன்றி கூறினார். கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலை வர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். சங்க ஸ்தாபக தலைவர் ஆர்.மனோ கரன், கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், சம்மேளன நிர்வாகி எம்.கண்ணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்ன தாக தஞ்சை போர்முரசு கலைக்குழு வின், ‘பென்சனை தேடி திறவுகோல்’ எனும் நாடகம் நடைபெற்றது.